Header Ads

test

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய கிராம வாசிகள்.

முல்லைத்தீவு விசுவமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகளால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

இச் சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரிகள் ​பொலிசாருக்கு தகவல் தெரிவித்தும்,பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் இராணுவ அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிரைக் காப்பாற்றி புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படைத்தனர்.

கடந்த ஜனவரி 8-ம் திகதி இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது தேராவில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் மற்றுமொரு இளைஞன் திருட்டு குற்றம் சுமத்தி தாக்கியுள்ளார்.

தாக்குதலால் காயமடைந்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளைஞரைப் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து மரத்தில் கட்டி வைத்து தாக்கிய நிலையில் இராணுவ அதிகாரிகள் அவரை காப்பாற்றிள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments