Header Ads

test

இறை பணியாற்றுவதற்காக இறைவன் என்னை ஒரு கருவியாக அனுப்பியுள்ளார் -புதிய பேராயர் வே.பத்மதயாளன்.

 இறை பணியாற்ற இறைவனால் அனுப்பப்பட்ட கருவிகளில் ஒருவனாக, சமயத்தையும் தாண்டி சமுதாயப் பணிக்காக என்னை அர்ப்பணிப்பேன் என தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் தெரிவித்துள்ளார்.

புதிய பேராயராகப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (3.01.2023) யாழ். வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இறை பணியாற்றுவதற்காக இறைவன் என்னை ஒரு கருவியாக அனுப்பியுள்ளார். என்னை இந்த பொறுப்புக்கு வருவதற்கு பிரார்த்தித்த அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

எமது திருச்சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



No comments