Header Ads

test

கிளிநொச்சியில் முதியவரை மோதித் தள்ளிய அரச பேருந்து.

 கிளிநொச்சி முகமாலை பகுதியில் விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்துச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் முகமாலை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அரச பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முத்தையா கந்தசாமி என தெரியவந்துள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் எதிர் திசையில் பயணித்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திடீர் என மறுபக்கம் திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால் பயணித்த கார் பேருந்து பயணித்த திசைக்கு திருப்பியபோது  விபத்தை தவிர்க்கும் நோக்குடன் பேருந்தை செலுத்திய சாரதி காருடன் மோதாத வகையில் மறுபக்கம் பேருந்தை திருப்பியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மேலதிக விசாரணைகளை பளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.






No comments