Header Ads

test

யாழில் டிக்டாக்கால் இளைஞன் ஒருவருரின் உயிருக்கு நேர்ந்த ஆபத்து.

 யாழ் பருத்தித்துறையிலுள்ள துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம்  நேற்று மாலை (01-12-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் வீழ்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது-

இரண்டு நண்பர்கள் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் டிக்டாக் எடுக்க முனைந்த போது மோட்டார் வண்டியுடன் ஒருவர் கடலுக்குள்ளும் மற்றையவர் வெளியிலும் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர். தெய்வாதீனமாக இரண்டு இளைஞர்களும் உயிர் தப்பியுள்ளனர்.


No comments