Header Ads

test

யாழில் பரீட்சைக்காக சென்ற மாணவி திடீர் மாயம்.

 யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் பாடசாலை செயன்முறை பரீட்சைக்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த மதிவதணன் லக்சாயினி வயதையுடைய  சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளர்.

நாடகமும் அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்காக பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை இருந்து வீடு திரும்பவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


No comments