மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை வீரர்.
கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா எனும் கடற்படை சிப்பாய் இன்று (23) உயிரிழந்துள்ளார்.
இவர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ள நிலையில்,குறித்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment