Header Ads

test

இடை நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு.

 சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பேருந்துகள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில், டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் குறித்த பேருந்துகள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

105 டிப்போக்களில் இந்த பேருந்துகள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த பேருந்துகள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments