Header Ads

test

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

 பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்,எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில் இருந்தே தீ பரவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், எரிபொருள் விநியோக குழாய்கள் நிறுவப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் வரிசையில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகளால் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.




No comments