Header Ads

test

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

 கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை இந்திய செய்திச் சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த ஏற்பாடுகளை இந்தியா மேற்கொண்டது என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அதனை மறுத்திருந்தது.

இந்த நிலையில் மாலைதீவில் தரையிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு செல்வதாகவும், அங்கு சென்றதும், தமது பதவி விலகலை அறிவிப்பார் என்றும், இன்று (13-07-2022) மாலை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments