Header Ads

test

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி.

 அம்பலாங்கொடை கலகொடவில் இன்று மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பலனின்றி   பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் குலீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை உறுவத்தையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் தொடர்புபட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


No comments