Header Ads

test

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்.

 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் இரவு எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


No comments