Header Ads

test

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் கடத்தல் - பொலிஸார் தீவிர விசாரணை.

  முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05) கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர்கள் டிப்பர் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர்களை கடத்திச் சென்ற டிப்பர், வடிகானொன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கடத்தப்பட்ட இளைஞர்களையும் டிப்பருக்குள்ளேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


No comments