Header Ads

test

இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலி.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று(26) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அப்பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியின் தோரகொலயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணியளவில் மலர்ச்சாலையைத் திறப்பதற்காக உரிமையாளர் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




No comments