Header Ads

test

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்.

 திருகோணமலையில் எரிபொருள் பெறச் சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - கந்தளாய் எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் - 91ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெருந்திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காக திரண்டிருந்தனர்.

இந்த நிலையில் சில இளைஞர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் அத்துமீறி உள் நுழைந்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதன் போது,பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அவர்களைதடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.

அந்த இளைஞர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தியதோடு,பொலிஸார் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.

எரிபொருள் நிலையத்தில் சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டதோடு மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குடிபோதையில் இடையூறு ஏற்படுத்திய நபர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.

பின்பு வழமை போன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




No comments