Header Ads

test

மூதாட்டி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம்.

 யாழ். காங்கேசன்துறையில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (24-06-2022) வெள்ளிக்கிழமை காலை 78 வயதான சாணை தவமணி என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை விரைவில் கைது செய் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments