Header Ads

test

தமிழர் பகுதியில் புதிதாய் முளைத்துள்ள புத்தர் சிலை.

 இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும், இராணுவம் பொலிஸ்,விமானப்படை மற்றும் கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி அப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில்  புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு அழைத்து வரப்பட்டதுடன்,குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிகழ்வில் பௌத்த பிக்குகள், தென்பகுதி மக்கள் இராணுவம், பொலிஸ்,விமானப்படை,கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளதாக அறியமுடிகிறது.




No comments