Header Ads

test

ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலி.

 ரயிலில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை ரயில் நிலையத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திக்வெல்ல - வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்த இளைஞர் ரயிலின் கீழ் பகுதியில்  சிக்கியுள்ளார்.

இதையடுத்து, மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இளைஞர் மீட்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்திருந்தார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


No comments