Header Ads

test

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி.

 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் 59ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் தோப்பூர் 59ம் கட்டை ஜின்னா நகர்ப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.கொச்சிம்மா (63 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீட்டிலிருந்து நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதன் பின்னர் மோட்டார் சைக்கிளைச் சம்பவ இடத்தில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைக மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. 


No comments