Header Ads

test

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சந்தேக நபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

   சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியிருக்கின்றார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் தொிவிக்கையில்,

நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர் என் வீட்டிற்குள் வந்து தகாத முறையில் நடந்துகொள்ளமுன்றார்.

அப்போது நான் கூச்சலிட்டதை அடுத்து சந்தேக நபர் உடனடியாக வீட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்த அப்பெண், பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்போதே பொலிஸார் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாத்திமாவுக்கு இப்படியொரு கதி வந்திருக்காது என்றும் அப் பெண் மேலும் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


No comments