Header Ads

test

இலங்கையில் ரயில் பெட்டிக்குள் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம்.

  றம்புக்கனை ரயில் நிலையத்தில் இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்றுக்குள் காணப்பட்ட சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் ரயில் பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக றம்புக்கனை பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து றம்புக்கனை ரயில் நிலையம் வரை சென்று மறுநாள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில் எனவும் அது நேற்றைய தினம் இரவு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10.30 அளவில் றம்புக்கனை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தும் போது சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் ரயிலுக்குள் எவரும் இருக்கவில்லை என றம்புக்கனை ரயில் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபரிடம் நேற்று முன்தினம் பண்டாரவளையில் இருந்து பொல்காஹவெல வரை பயணித்தமைக்கான ரயில் பயணச்சீட்டு இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கேகாலை பொலிஸ் பிரிவின் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.



No comments