Header Ads

test

சிறுமி ஒருவர் சகோதரனால் சீரழிக்கப்பட்ட துயரச் சம்பவம்.

சகோதரனால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 13 வயதான சிறுமி வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை பெற்றோர் மொனராகலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 16 வயது அண்ணனால் , குறித்த சிறுமி வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பெற்றோர் வீட்டில் இல்லாத சமயங்களில் 16 வயது அண்ணன், தனது தங்கையுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சகோதரர் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



No comments