Header Ads

test

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம் - மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை(18) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் சம்மந்தப்பட்ட 5 உயர்தர மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பிரத்தியேக வகுப்பு என வீடுகளில் சென்று கணிதபாடம் கற்பித்து வந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் தெரிவான குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில் ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக காணிதபாடம் கற்பித்து வந்துள்ளார்.

பிரத்தியேக கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸாரால் செல்வவுரம்,சிலாவத்தை,உண்ணாப்பிலவு,கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை(20) கைது செய்யப்பட்டுள்ளார்கள். பின்னர் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 வயதுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த செவ்வாய்கிழமை(21) முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த வியாழக்கிழமை(23) சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்றில் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்ளை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments