Header Ads

test

யாழில் கடத்தப்பட்ட இளைஞன் - வெளியான திடுக்கிடும் தகவல்.

  யாழ்.பலாலி - அந்தோனிபுரம் பகுதியில், கஞ்சாவால் ஏற்பட்ட தகராறில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி இளைஞனை கடத்திச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடத்தலுடன் தொடர்புடைய 3 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான இளைஞன் கஞ்சா தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய பின்னர் ஏமாற்றியுள்ளார்.

பின்னர் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் போலி கஞ்சாவை கொடுத்து ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த தரப்பு குறித்த இளைஞனை கடத்தி 3 லட்சம் ரூபா பணத்தை பெற்ற பின் அவரை விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments