Header Ads

test

நாட்டில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

 ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்துகொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மகனுடன் பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ளார்.

காவடி நடனம் ஆடுவதற்காக குறித்த நபர் சென்ற வேளை இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments