Header Ads

test

சவப்பெட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின ஊர்வலம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் “தமிழ்தேசிய மே நாள்” நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மே தின பேரணியானது ஏ9 வீதி ஊடாக டிப்போ சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த பேரணி ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன்,எஸ் சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மற்றும் சரவணபவன் ஊள்ளிட்டோர் ஆரம்பித்துவைத்தனர்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மே தின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கி குறித்த பேரணி இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றம் விவசாய அமைச்சர் ஆகியோர் விவசாயிகளின் பிரேத பெட்டியை சுமந்து வருகின்ற காட்சிகளையும் சித்தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments