Header Ads

test

வனப்பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்.

 வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அனுராதபுரம் நிரவிய தேக்குமரக்காட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞரின் உடலில் வெட்டுக்காயங்களும், தீக்காயங்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் தேவனம்பியதிஸ்ஸபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று முன் தினம் (23) இரவு 11:30 மணி வரை இளைஞன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதனை அடுத்து மறுநாள் காலை குறித்த இளைஞன் சென்றதில் இருந்து உறவினர்கள் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தை தேடி வந்துள்ளனர்.

அவர் அங்கு இல்லாததால் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

எரிந்த நிலையில் கிடந்த இளைஞனின் உடல் அருகே கைத்தொலைபேசியும், லைட்டரும் கண்டெடுக்கப்பட்டன. உபகரணங்கள் எதுவும் எரிந்து போகவில்லை எனவும் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments