Header Ads

test

சமுர்த்தி பயனாளிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் பந்துல திலகசிறி கூறியுள்ளார்.

அதனடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா தொடக்கம் 7,500 ரூபா வரையான நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் கூறியுள்ளார்.


No comments