Header Ads

test

மே தின பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

 எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு மே தினத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள மே தின நிகழ்வுகளையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு இருக்கின்றன.இந்த மே தினத்தில் நாங்கள் எங்கள் அறைகூவலை கொடுக்க இருக்கின்றோம்.

இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து பசுமை பூங்கா வளாகம் வரை பேரணியாக சென்று அங்கே பொதுக்கூட்டம், கண்டன உரை நடைபெற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments