Header Ads

test

10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய இளைஞன்.

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இளைஞனுக்கு எதிராக குழந்தையின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



No comments