Header Ads

test

மட்டக்களப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

   மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச்சங்கேணி பகுதியில் கா.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மாணவியின் தந்தை இறந்த நிலையில், தாயார் வெளிநாடு சென்ற சூழலில் , அம் மாணவி பனிச்சங்கேணியில் வசிக்கும் திருமணமான சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு உணவு உண்ட பின்னர் உறங்கச்சென்ற மாணவி , அவரது வீட்டிலேயே காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் காது , மூக்கு மற்றும் பெண்ணுறுப்பில் இரத்தம் வழிந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக, வைத்தியசாலை பிரேத பரிசோதனை பிரிவில் சேவையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை உடற்கூற்று பரிசோதனை முடிவடையவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என ஊர்மக்கள் சந்தேகிக்கும் ஒருவரை, அங்குள்ள ஆயுதக்குழு ஒன்று காப்பாற்ற பல்வேறுபட்ட வேலைகளில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் தொழில் ஒன்றில் ஈடுபட்டுவரும் சந்தேகநபர், உயிரிழந்த மாணவியின் சகோதரி உட்பட நால்வரை திருமணம் செய்ததாக கூறப்படும் நிலையில், மாணவியின் அக்காவை மட்டுமே அவர் சட்டபூர்வமாக திருமணம் முடித்ததாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சந்தேகநபரை காப்பாற்ற ஆயுதகுழு ஒன்று முன் நிற்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ள ஊர் மக்கள், சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களாகியும், அது குறித்து கூட்டமைப்பின் தமிழ் அரசியல் கட்சிகள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லையெனவும் வேதனை வெளியிட்டுள்ளனர்.       


No comments