Header Ads

test

இனம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கர வண்டி.

நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் குறித்த வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட குழுவொன்றே குறித்த முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளது. 

இதனால் முச்சக்கரவண்டி பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 



No comments