Header Ads

test

பிரதமரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி.

 19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியிருந்தது.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



No comments