Header Ads

test

இலங்கைக்கு உதவி செய்ய முன்வந்துள்ள மற்றுமொரு நாடு.

 அண்மைக்காலமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகின்றது.

இந்த நிலையில், இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்த தகவலை இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.



No comments