Header Ads

test

பெண் ஒருவரை காப்பாற்ற உயிர்விட்ட இரு இளைஞர்கள் - இலங்கையில் நடந்தேறிய கோரச் சம்பவம்.

 தெஹியோவிட்ட – சீதாவக்க ஆற்றில் மூழ்கி கொழும்பை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில் குளிக்கச் சென்ற போது பெண் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.

நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றுவதற்கு முற்பட்ட இரண்டு இளைஞர்களும் நீரில் மூழ்கியதை அடுத்து , பிரதேச மக்களால் மூவரும் மீட்கப்பட்டனர். மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டு இளைஞர்களும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments