Header Ads

test

இலங்கை மக்களை பீடித்துள்ள புதிய வகை நோய்.

 புதுவகையான நோய் ஒன்று இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கை மக்கள் தொகையில் 16 வீதமானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் நித்திரையின் போது குறட்டை விடும் நபர்களிடம் இந்த நோய் நிலைமையை அதிகளவில் காண முடியும்.

அதிலும் குறிப்பாக பருமனான உடலமைப்பை கொண்டவர்களுக்கு பெருமளவில் இந்த நிலைமை ஏற்படுகிறது. இப்படியான நபர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், சீரான சுவாசம் நடைபெறுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் சுவாச நோய்கள் தொடர்பான சிறப்பு நிபுணர் மருத்துவர் சந்திமானி உந்துகொடகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நோய் நிலைமை காரணமாக உறக்கம் குறைந்து, உடலுக்கு தேவையான ஒக்சிஜன் கிடைப்பதில்லை.

இதனால், சுவாச கோளாறு, பாலியல் குறைப்பாடுகள், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படலாம். உறங்கும் போது ஒரு மணி நேரத்திற்கு 5 முறைக்கு அதிகமாக முச்சித்திணறல் ஏற்படுமாயின் அது இந்த நோயின் அறிகுறியாகும்.

இதனை மருத்துவ விஞ்ஞானம் மூலம் கண்டறிய முடியும். இந்த நோய் உள்ளவர்கள் உறக்கத்தின் போது சத்தமாக குறட்டை விடுவார்கள் எனவும், அதேசமயம் குறட்டை விடுபவர்கள் அனைவரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நோயை வயது வந்தவர்களிடம் அதிகளவில் காண முடியும். எனினும் தற்போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.

அதேவேளை பிறப்பில் இருந்தே இந்த நோய் இருக்கும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுவாசம் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி இந்த நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மருத்துவர் சந்திமானி உந்துகொடகே தெரிவித்துள்ளார். 


 

No comments