Header Ads

test

குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.

தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாய் தகராறினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான 34 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  



No comments