Header Ads

test

22ம் ஆண்டு நினைவஞ்சலி.

 அன்பில் உருவமாய் 

பண்பில் சிகரமாய் 

குடும்பத்தின் குலவிளக்காய்

எம்  வாழ்வில் மெழுகுவர்த்தியாய் 

எம்மை வாழ வைத்த 

எம் அருமை அப்பாவே .  

உம் பாசமொழி கேளாது 

இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே,

வேலைக்கு சென்ற அப்பா 

வருவாரென வழிமேல் 

விழி வைத்து காத்திருந்தோமே.!!!

உங்கள் பிரிவறிந்து 

உணர்வற்ற மரங்களானோமே.!!!

ஈழம் ஈழம் என்று 

சண்டை பிடித்தீரே 

உங்கள் சண்டையில் 

ஒன்றுமே அறியாத 

எங்கள் அப்பாவை 

பலிக்கடாவாக்கியது ஏனோ???

எப்போ கண்போம் 

எம் தெய்வத்தை??? 

தேடுகிறோம் தேடுகிறோம் 

எங்கள் அப்பாவை 

பூமியில் காணவில்லை இன்று வரை...



No comments