Header Ads

test

வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு.

 வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு  வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 17 வருடங்கள் தொடர்ச்சியாக கடமை புரிந்ததுடன் யுத்த சூழலுக்குள்ளும் மக்களுக்கான சேவையை மனம் தளரது ஆற்றிய பெருமகனை இழக்க நேரிட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்காலத்திலும் தான் சேவையாற்றிய பிதேச மக்களுக்காக  உலர் உணவுகளை வழங்கியதுடன் இவர் சிறந்த படைப்பாளியாகவும் கலைஞானகவும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பொறித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த  பிரதேச செயலாளர் நோய்த் தாக்கம் காரணமாக கடந்த 16ம் திகதி உயிர் நீத்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


















No comments