Header Ads

test

யாழில் சிறப்பு அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

   யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று, சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்ட போது ஏற்பட்ட இழுபறியின் போது அதிரடிப்படையினரே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் கையில் காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments