Header Ads

test

மட்டக்களப்பில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தையும் மகளும்.

 மட்டக்களப்பில் 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தை இன்று காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  நேற்று மாலை  சிறுமி   நஞ்சு அருந்தி  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து   சிறுமியின் தந்தையார் இன்று காலை வீட்டின் அறையிலுள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இந் நிலையில் இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை ஏறாவூர் பொலிசார்  மேற்கொண்டு வருவதுடன் ,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும்   முன்னெடுத்துள்ளனர்.


No comments