Header Ads

test

நெஞ்சை பதறவைக்கும் இரு வேறு கொலைச் சம்பவங்கள்.

 வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் பெண் ஒருவரை கூரிய ஆயுத்தால் குத்தி கொலை செய்து விட்டு, நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் முறைகேடான கணவர் என சந்தேகிக்கப்படும் நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்து வந்ததாகவும், அவரது கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொலையை செய்த சந்தேக நபரும் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

41 வயதுடைய இவர் கோனதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர். வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ககேவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 23 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments