Header Ads

test

கிளிநொச்சியில் வன்முறைச் சம்பவம் ஒன்றில் உயிர் பிழைத்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்.

 கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று(01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்  என்பவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது அக்காவின் மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது தான் அதனை தடுக்க சென்றதாகவும், அதன் போது தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும், பின்னர் அவர்கள் கார்த்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் தெரிவித்துள்ளார்.

இன்றைய (02) தினம் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி காவல்துறையினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.




No comments