Header Ads

test

கிளிநொச்சியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.

 கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அங்கு மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் நேற்று முந்தினம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த தகவலிற்கு அமைவாக தர்மபுரம் பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்று அகழ்வு பணிகளை ஆரம்பித்த நிலையில் இதுவரை ரி 56 ரக துப்பாகிகள், வெடி பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து அகழ்வு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும், வெடி பொருட்கள் ஆகியன துருப்பிடித்து காணப்படுவதாகவும், அவை செயல் திறண் உள்ளவையா என்பது தொடர்பில் அகழ்வு பணிகள் நிறைவுற்றதன் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments