Header Ads

test

குருநாகலில் நடந்தேறிய மனதை உலுக்கும் சம்பவம்.

 குருநாகல் பகுதியில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (29) குருநாகல் அனுராதபுர வீதியில் கல்கமுவ, மாகல் கடவல பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இவ்விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


No comments