Header Ads

test

யாழிலிருந்து கொழும்புக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம்.

 ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு காணாமல்போன மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மூவரும் நேற்று (30) மாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த நிலையிலேயே, இந்த குழுவினர், அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல − துன்மோதர பகுதியிலுள்ள குமார எல்ல ஆற்றில் நீராடச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளனர்.

14 வயதான இரு சிறுமிகள் மற்றும் 29 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 


No comments