Header Ads

test

அரச ஊழியர்ளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திஸாநாயக்க.

    அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஊடகங்களிடம் இன்று அவர் தெரிவிக்கையில்,

உரப் பிரச்சினையைப் பார்த்தால் யூரியாவைக் கொடுக்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனாலும், இயற்கைப் பசளையே சிறந்தது. அடுத்து இப்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை. இந்தப் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

நமது நாட்டுக்கு இப்போது முக்கியமாகத் தேவைப்படுவது வெளிநாட்டு பங்களிப்பு என குறிப்பிட்ட அவர், எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு ஜனவரியில் தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.

இந்த நிலையில் நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை. அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.  


No comments