Header Ads

test

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் போராட்டம்.

 வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கோஷங்கள் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம்  இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம்  இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது, 

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும், காணிகளை சுவீகரிக்காதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.



No comments