Header Ads

test

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 22 உயிரிழப்புகள்.

 நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 22 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி 12 ஆண்களும் 10 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொவிட் காரணமாக இதுவரை பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 191 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,875 ஆக உயர்வடைந்துள்ளது.


No comments