Header Ads

test

யாழில் கொட்டனுகளுடன் நடமாடும் கடற்படையினர் - அச்சத்தில் மக்கள்.

 மாதகல் - குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டன்களுடன் குவிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவியவந்துள்ளது.

மாதகல் - குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான ஒரு பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடியுள்ளனர்.

இதனை அறிந்து கொண்ட கடற்படையினர் கொட்டன்களுடன் அவர்களை சூழ்ந்து கொண்டுள்ளதுடன் குறித்த மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவ் அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








No comments