Header Ads

test

யாழ் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மனித சடலங்கள்.

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிகளில் உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள  இரண்டு உடல்களும் ஆண்களுடையதாக உள்ளபோதும் அடையாளம் காண முடியாத நிலமையில் உள்ளது.

இதன் காரணமாக இலங்கை இந்திய மீனவர்கள் யாரும் காணாமல் போனார்களா என ஆராயப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. 




No comments